Header Ads

Header ADS

இரண்டு வருடத்திற்கு நான் ரொம்ப பிஸி: யோகி பாபு!


காமெடி நடிகர் யோகி பாபுவி, புது பட கால்ஷீட் இன்னும் இரண்டு வருடத்திற்கு இல்லை என்று அவரே கூறியுள்ளார். 

சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தற்போது மிகப்பெரிய காமெடியனாக வளர்ந்து இருப்பவர் யோகி பாபு. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒவ்வொரு இயக்குனரும் ஹீரோ, ஹீரோயினியை புக் பண்ணுவதை விட முதலில் யோகி பாபுவைத்தான் புக் பண்ணுகிறார்கள். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் யோகி பாபுவின் காமெடிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். 

அவரது கால்சீட் கிடைக்கவில்லை என்கிற பட்சத்தில் தான் மற்ற காமெடியனை தேடிச் செல்கிறார்கள். அந்த வகையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை யோகிபாபுவின் கால்சீட் டைரி புல்லாகியிருக்கிறது. 

இதுபற்றி யோகி பாபு கூறுகையில், ‘‘என்னைத்தேடி வருபவர்கள் யாரையும் நான் ஏமாற்ற விரும்பவில்லை. கால்ஷீட் இல்லாமல் சிலரை திருப்பி அனுப்ப எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தற்போது நான் ஓய்வில்லாமல் இரவு, பகல் நடிக்கிறேன். தூங்குவதற்கு கூட நேரம் கிடைக்காததால் கேரவனுக்குள் ஒரு சில மணிநேரமே தூங்குகிறேன்’’ என்றார் யோகி பாபு.

No comments

Powered by Blogger.