புதுமுக இயக்குநருடன் புத்தம் புதிய தோற்றத்தில் வருகிறார் விஜய் சேதுபதி!!
நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக புதுமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்பவரின் படத்தில் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் நடிக்க உலாதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான படங்களை வழங்கி, அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
தற்போது, அவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான படங்களை வழங்கி, அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.
தற்போது, அவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக பிரபல இயக்குநர்களின் படத்திலேயே நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இயக்குநர் ஜனார்த்தனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் தனது தோற்றத்தை மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments